Wednesday, July 21, 2010

எந்திரன்

நான்
ஒரு கதை சொல்லி
என்று வந்தான்  அவன்.
உங்கள்
நாட்குறிப்புகளைக்
கொடுங்கள்.
உங்கள் வாழ்வைக்
கதையாய்ப்
பின்னித் தருகிறேன் என்றான்

என் நாட்கள் யாவும்
நகல்களால் நிரம்பியவை
எனினும்
தன்கதையைப்
பிறர் பேசக் கேட்கும்
அற்ப ஆசை
என்னையும் தொட்டது,

சில காலம் கழித்து
ஏமாற்றத்துடன்  வந்தான் .
'மன்னிக்கவேண்டும்
நான்
ஒரு
அறிவியல் கதை சொல்லி அல்ல.
இயந்திரங்களைப்
பற்றி எழுத
எனக்குத் தெரியாது.'
என்றான் வருத்தமாய்..

2 comments:

LinkWithin

Related Posts with Thumbnails